அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீதும் தாக்குதல்!
#SriLanka
Thamilini
11 months ago
அரசாங்க அச்சக திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் தாக்கப்பட்டுள்ளது.
அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி திரு.நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த இணையத்தளம் வேறு வெளி தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருவது அவதானிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதான தகவல் பாதுகாப்பு அதிகாரி திரு.நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை காவல்துறையின் யூடியூப் சேனல் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.