இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஹரிணி!

#SriLanka
Dhushanthini K
5 months ago
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ஹரிணி!

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் திறந்துவைத்துள்ள இரங்கல் புத்தகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (30) தனது மரியாதையை வெளிப்படுத்தினார்

டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா டிசம்பர் 26, 2024 முதல் ஜனவரி 1, 2025 வரை ஏழு நாட்கள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது.

அதேசமயம், இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று (30) முதல் ஜனவரி 01, 2025 வரை இரங்கல் புத்தகத்தை திறந்து வைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!