79 இளைஞர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பை வழங்கிய இஸ்ரேல்!
#SriLanka
#Israel
Dhushanthini K
5 months ago

இஸ்ரேலில் விவசாயத் துறையில் சட்டரீதியாக வேலைக்குச் சென்று இந்நாட்டுக்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று மீண்டும் இஸ்ரேலில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, இவர்களுக்கான விமான டிக்கெட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வளாகத்தில் அண்மையில் வழங்கப்பட்டது.
79 இளைஞர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன, அவர்கள் இஸ்ரேலில் 5 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சேவைக் காலத்தைக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டு சேவை பணியகத்தின் தலைவர் திரு.கோசல விக்கிரமசிங்க, இஸ்ரேலில் விவசாயம் தொடர்பான வேலைகளுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த தொழிலாளர்கள் வர்த்தக முத்திரை தூதுவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.



