மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

#SriLanka #Arrest #Police
Dhushanthini K
6 months ago
மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது!

இலங்கை பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட போக்குவரத்து நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன்படி, இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கையின் கீழ், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் உட்பட மொத்தம் 8,747 சாரதிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவின் பணிப்புரையின் பேரில் கடந்த 23ஆம் திகதி முதல் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தீவில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாட்களில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட ஏனைய வாகனங்களால் ஏற்படும் வாகன விபத்துக்களை கருத்தில் கொண்டு இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்கும் வகையில் இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!