ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் : 46 பொதுமக்கள் உயிரிழப்பு!
#SriLanka
#Afghanistan
#Pakistan
Thamilini
1 year ago
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் நடுவே, ஆப்கானிஸ்தானில் உள்ள பல கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
பாகிஸ்தானில் நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.