ஒரு கிலோ கோழிக்கறியை லஞ்சமாக வாங்கிய வருவாய்த்துறை அதிகாரி கைது!

ஒரு கிலோ கோழிக்கறியை லஞ்சமாக வாங்கிய வருவாய்த்துறை அதிகாரி மற்றும் களப்பணியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முறைப்பாட்டுக்குச் சொந்தமான கடையின் அடுத்த வருடத்திற்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த சந்தேகநபர்கள் 1,170 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் போது, முறைப்பாடு செய்த வர்த்தகரின் கடைக்கு முன்பாக சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேவல்தெனிய உப அலுவலகத்தில் கடமையாற்றும் வருவாய் உத்தியோகத்தர் ஒருவரும், மேரிகம உள்ளூராட்சி சபையின் வீதித் திணைக்களத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



