முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவை அதிகரிக்க தீர்மானம்!
#SriLanka
#children
Dhushanthini K
6 months ago

2025 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பகால குழந்தை அபிவிருத்தி நிலையங்கள் மற்றும் முன்பள்ளி சிறார்களுக்கு வழங்கப்படும் காலை உணவை 155,000 குழந்தைகளுக்கு அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் 60 ரூபாவை 100 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



