பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதியுதவி வழங்கும் இந்தியா!
#India
#SriLanka
Dhushanthini K
6 months ago

இலங்கை பொலிஸ் வாகனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவியாக 300 மில்லியன் இலங்கை ரூபாவை நிதி மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
இந்த உதவித்தொகையை பயன்படுத்தி வடமாகாண பொலிஸ் நிலையங்களின் கடமை தேவைகளுக்காக கெப் வண்டிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.



