மூன்றுநாள் இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் ஜனாதிபதி!
#India
#SriLanka
#AnuraKumaraDissanayake
Thamilini
11 months ago
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் நேற்று (17ம் திகதி) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக இன்றைய தெரண விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவாக கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் அதே விமானத்தில் திரும்பியிருந்தனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 இல் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதியும் அவரது குழுவினரும் வந்தடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.