சீனப் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான பணமோசடி தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#China
Dhushanthini K
8 months ago

சீனப் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆன்லைன் பண மோசடியின் உண்மைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.
ஆன்லைன் கணக்குகள் மூலம் இந்த பெரிய அளவிலான மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையக் கணக்குகள் மூலம் பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சீன பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இது தெரியவந்துள்ளது.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் பெரிய அளவில் பணத்தை ஏமாற்றிய சீன நாட்டு ஆட்கடத்தல் கும்பலின் கணக்குகளில் 1500 மில்லியன் ரூபா பணம் புழக்கத்தில் இருந்ததாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.



