பிரித்தானியாவில் 10,000 அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்
#government
#England
#LayOff
#officer
Prasu
10 months ago
பிரித்தானியாவில் 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பிரெக்சிட் மற்றும் கோவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சரிவுகளை சரிசெய்ய அமைச்சர்கள் 5% சேமிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் சேவை மிகவும் பெரியதாகவும், கட்டுப்பாடற்றதாகவும் மாறியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன்படி வைட்ஹாலில் தற்போது 513,000 முழுநேர அரசு ஊழியர்கள் உள்ளனர், இது 2016 இல் 380,000 ஆக இருந்த குறைந்த அளவிலிருந்து 133,000 அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைத்துக்கொள்ள அமைச்சர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.