அஹுங்கல்ல கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த சோகம்!
#SriLanka
#Sea
Dhushanthini K
8 months ago

அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவரும் பெண்ணொருவரும் நீராதாரத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு தம்பதிகளை மீட்டு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்.
விபத்தில் உயிர் தப்பிய வெளிநாட்டவர் 29 வயதான ருமேனிய பிரஜை எனவும், பெண் 30 வயதான சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



