இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் மர்ம நோய்!
#SriLanka
#children
#Fever
Dhushanthini K
8 months ago
இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயொன்று இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் பரவிவருவது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
காய்ச்சல், குளிர், தலைவலி, மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், தசை அல்லது உடல் வலி, குமட்டல், சோர்வு, பசியின்மை போன்றன காய்ச்சலின் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பருவக்கால நோய் எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள் அண்மைகாலமாக நோய் நிலைமை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆகவே சிறுவர்கள் குறித்து கவனமாக செயற்படுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.