18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்ட வலம்புரி சங்குகளுடன் இருவர் கைது!
#SriLanka
#Arrest
Dhushanthini K
8 months ago
18 இலட்சத்திற்கு விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்ட இரண்டு வலம்புரி வகைகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய கொபேகனே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.