“தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டே நடவடிக்கை எடுப்பேன்” - ஊழல் ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி!
#SriLanka
#corruption
#AnuraKumaraDissanayake
Dhushanthini K
9 months ago

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஊழல் மோசடிக்கு எதிராக தன்னை அர்ப்பணிப்பேன் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்பு குறித்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்றாவிட்டால் சட்டங்களை இயற்றுவதால் பலன் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.



