அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானம்!

#SriLanka #government
Dhushanthini K
8 months ago
அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானம்!

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார். 

 இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மாதாந்த வாடகை 5 மில்லியன் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05.12) பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  "பல அமைச்சகங்கள் நிறுவனங்களை வாடகைக்கு விடுகின்றன. இரத்தினங்கள் மற்றும் நகை ஆணையத்தின் மாத வாடகை 5 மில்லியன். வர்த்தக அமைச்சகத்தின் மாத வாடகை 65 லட்சம்.  அவற்றை அரசு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!