அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானம்!
#SriLanka
#government
Dhushanthini K
8 months ago

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05) தெரிவித்தார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் மாதாந்த வாடகை 5 மில்லியன் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று (05.12) பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "பல அமைச்சகங்கள் நிறுவனங்களை வாடகைக்கு விடுகின்றன. இரத்தினங்கள் மற்றும் நகை ஆணையத்தின் மாத வாடகை 5 மில்லியன். வர்த்தக அமைச்சகத்தின் மாத வாடகை 65 லட்சம். அவற்றை அரசு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.



