உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!
#SriLanka
#exam
#Test
Thamilini
10 months ago

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள் உயர்தரப் பாடசாலையை நடத்துவதில்லை என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் மூன்று நாட்களுக்கு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



