இலங்கையில் இரு தனியார் நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்!
#SriLanka
#Attack
Dhushanthini K
8 months ago
இலங்கையில் இரு தனியார் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது நாட்டின் போதிய இணைய பாதுகாப்பு பாதுகாப்பை எடுத்துக்காட்டுகிறது என்று உள்ளூர் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செகுவாலிஸின் அறிக்கை தெரிவிக்கிறது.
கார்கில்ஸ் மற்றும் கோகோ கோலா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ பக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.