இஸ்ரேல் வான்தாக்குதலில் காசா முனை மற்றும் லெபனானில் 79 பேர் பலி

#Death #Attack #Israel #Gaza #Lebanon
Prasu
1 year ago
இஸ்ரேல் வான்தாக்குதலில் காசா முனை மற்றும் லெபனானில் 79 பேர் பலி

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குல் நடத்திய வருகிறது.

காசா முனையில் கடந்த 24 மணி நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசாவுக்குள் அதிக மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இஸ்ரேலுக்கான ராணுவ ஆதரவைக் குறைக்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியிருந்தது. 

இந்த நிலையில் இஸ்ரேல் வான்தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா நடமாட்டம் அதிகமாக காண்ப்பட்ட தஹியே என்ற பகுதியில் இஸ்தேல் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இங்குள்ள 11 வீடுகளில் இருந்தவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

 ஹிஸ்புல்லாவின் கட்டமைப்பு, கட்டளையிடும் மையம், ஆயுதங்கள் தயாரிக்கும் இடம் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4