கண்டியில் கைது செய்யப்பட்ட இரு சீன பெண்கள் : விசாரணையில் வெளிவந்த தகவல்!
#SriLanka
#China
#Arrest
Dhushanthini K
9 months ago

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டு பெண்கள் இருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டி மத்திய சந்தை வளாகத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
47 மற்றும் 48 வயதுடைய இரண்டு சீனப் பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



