IMF மூன்றாவது தவணை நிதிக்கான இலங்கையின் நிலைப்பாடு!
#SriLanka
#IMF
Mayoorikka
1 year ago
சீர்த்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை இலங்கை அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
விரைவில் வரவிருக்கும் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் மூன்றாவது தவணைக்கு மதிப்பாய்வை நோக்கி விரைவாக முன்னேறும் வகையில் அதை நிலைநிறுத்தியுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய, பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.