அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்கத் தயார்! டக்ளஸ்
#SriLanka
#Sri Lanka President
#Douglas Devananda
Mayoorikka
9 months ago

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை, அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை முன்னிறுத்தி செயற்படுமேயானால், அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கு 4 - 5 ஆசனங்கள் கிடைத்தால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கும் இலகுவில் தீர்வுகாணமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.



