கொழும்பிற்கு சைக்களில் பயணித்த மாணவி பிரதமரிடம் முன்வைத்த கோரிக்கை!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
காத்தான் குடியில் இருந்து கொழும்பிற்கு சைக்கிளில் பயணித்த பெண் இளம் பெண் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் செய்தி ஒன்றை கையளித்துள்ளார்.
பாத்திமா நடா என்ற 14 வயதுடையமாணவி காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சைக்கிளில் பயணித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் இளம்பெண் தனது சிறப்பு செய்தியில் கோரியுள்ளார்.