அதானி குழுமத்தின் காற்றாலை மின் திட்டம் குறித்து வெளியான தகவல்!
#SriLanka
#Mannar
#Power station
Mayoorikka
1 year ago
மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது.
விடத்தல்தீவில் அதானிகுழுமம் காற்றாலை மின் திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.