களுத்துறையில் ரயில் மோதி மூவர் பலி!
#SriLanka
#Accident
#Train
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago

கட்டுகுருந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி மூன்று வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த விரைவு ரயிலுடன் மோதியதில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் குழந்தையின் 22 வயதுடைய தந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் களுத்துறை தெற்கு ரஜவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



