பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலி

#Death #people #Pakistan #Fight
Prasu
1 year ago
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அப்பர் குர்ரம் மாவட்டத்தில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. 

இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.

கடந்த மாதம் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், லோயர் குர்ராம் மாவட்டத்தில் நிலத்தகராறு ஒன்றில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 7 பேர் பலியானார்கள். 

இதனையடுத்து, இரு குழுவினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என அதுபற்றிய தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், குர்ரம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 5 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

இவர்கள் கடந்த காலங்களில், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர் என கூறப்படுகிறது. 

அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4