இஸ்ரேல் மக்களை வெளியேறுமாறு ஹிஸ்புல்லா எச்சரிக்கை
#world_news
#Israel
Mayoorikka
1 year ago
வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுமாறு, அந்நாட்டு மக்களை ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ளது. இஸ்ரேல் படைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்களின் வீடுகளை இராணுவ தளங்களாக பயன்படுத்தி வருவதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில காலமாக இஸ்ரேல் - லெபனான் எல்லை மோதல்கள் இருந்து வந்தாலும், கடந்த 23ஆம் திகதி முதல், ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. லெபனானில் நடந்த மோதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.
ஹிஸ்புல்லா போராளிகளால் பரவலாகப் பயன்படுத்தப்படும் பேஜர்கள் உட்பட தகவல் தொடர்பு சாதனங்களை இஸ்ரேலின் அதிநவீன ரிமோட் வெடிப்பே இந்த மோதல்களுக்கு ஒரு முக்கிய காரணம் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.