வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#wellawatte
Thamilini
1 year ago
வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் இன்று (03) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய சாதாரண உருவம் கொண்டவர். இறந்தவர் யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.