ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் - இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு

#India #UN #council #England #Member
Prasu
1 year ago
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் -  இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 5 நிரந்தர உறுப்பினர்களையும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளையும் கொண்டுள்ளது. 

அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையால் இரண்டு வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

5 நிரந்திர உறுப்பினர்களான ரஷியா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகியவை எந்தவொரு முக்கிய தீர்மானத்தையும் வீட்டோ செய்ய அதிகாரம் கொண்டவை.

இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஆதரவு தெரிவித்து இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) நிரந்தர உறுப்பினராக இந்தியாவை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆதரித்தார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 79-வது கூட்டத்தின் பொது விவாதத்தில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், "அரசியலால் முடங்கிவிடாமல், செயல்படத் தயாராக இருக்கும், அதிக பிரதிநிதித்துவ அமைப்பாக ஐ.நா. மாற வேண்டும். பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியவை நிரந்தர உறுப்பினர்களாகக் காண விரும்புகிறோம். 

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கும் அதிக இடங்கள் இருக்க வேண்டும். நம்மிடம் ஒரு பாதுகாப்பு கவுன்சில் தடைசெய்யப்பட்டிருக்கும் வரை, ஒவ்வொரு தரப்பினரின் நலன்களுக்கும் ஏற்ப, நாம் முன்னோக்கிச் செல்வதில் சிரமம் இருக்கும் என்று கூறுவேன். 

எனவே இந்த ஐக்கிய நாடுகள் சபையை மிகவும் பயனுள்ளதாக்குவோம், முதலில் அவற்றை அதிக பிரதிநிதிகளாக்குவோம். அதனால்தான் பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கப்படுவதற்கு பிரான்ஸ் ஆதரவாக உள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4