ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் : இஸ்ரேல் எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானில் திங்கட்கிழமை தொடங்கிய தாக்குதல்களால் இதுவரை 558 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 50 பேர் குழந்தைகள்.
1990 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் லெபனானில் பதிவான மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.