புலமை பரிசில் பரீட்சையின் 03 வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
புலமை பரிசில் பரீட்சையின் 03 வினாக்களை நீக்குவதற்கு தீர்மானம்!

சர்ச்சைக்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாள், முறையான பரீட்சையின் பின்னர் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.

 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாதிரித் தாள் மூலம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் விளக்கமளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அதன்படி இன்று புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளை தயாரித்த குழு ஒன்று கூடி கலந்துரையாடப்பட்டு அது தொடர்பான மூன்று வினாக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

 இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை (18) புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்லவுள்ளதாகவும், அவர்களின் அறிக்கையின் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!