சுவிட்சர்லாந்தில் உடற்குறைபாடு கொண்ட குழந்தையைக் கொலை செய்த பெற்றோர்

#Switzerland #Murder #baby
Prasu
1 year ago
சுவிட்சர்லாந்தில் உடற்குறைபாடு கொண்ட குழந்தையைக் கொலை செய்த பெற்றோர்

சுவிட்சர்லாந்தில், உடற்குறைபாடு கொண்ட தங்கள் குழந்தையைக் கொலை செய்த பெற்றோருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்திலுள்ள Hägglingen என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த 34 வயது நபரும் அவரது மனைவியான 32 வயதுப் பெண்ணும். 2020ஆம் ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி, தங்கள் மகளைக் கொலை செய்தார்கள்.

அந்த மூன்று வயதுச் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து சுயநினைவிழக்கச் செய்து, பின்அவளது மூச்சை நிறுத்தியுள்ளார்கள் அந்த தம்பதியர்.

 பிறவியிலேயே மூளையில் இருந்த பிரச்சினையால், அந்தச் சிறுமி உடற்குறைபாட்டுடன் பிறந்திருந்தாள். அந்த தம்பதிக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4