10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

#Flight #Malasia #Missing
Prasu
1 year ago
10 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமானம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்எச்-370 என்ற பயணிகள் விமானம் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்றபோது காணாமல் போனது. அதில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என 239 பேர் இருந்தனர். 

விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 7-வது வளைவுக்கு அருகில் விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, சுமார் 120,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தேடியும், விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. 

இதனால் 2017-ல் தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஏற்கனவே நடந்த தேடுதல் பணியின்போது, ஆப்பிரிக்க கடற்கரைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளின் பல துண்டுகள் எம்எச்-370 விமானத்தின் துண்டுகள் என உறுதிப்படுத்தப்பட்டன. 

ஆனால் விமானத்தின் பெரும்பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மாயமான விமானம் குறித்த மர்மம் நீடித்தது. எம்எச்-370 விமானம் காணாமல் போய் 10 ஆண்டுகளை கடந்த நிலையில், விமானம் விழுந்து மூழ்கிய சரியான இடத்தை கண்டுபிடித்ததாக ஆஸ்திரேலிய விஞ்ஞானி வின்சென்ட் லைன் சமீபத்தில் கூறியுள்ளார்.

டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் அண்டார்டிக் ஆய்வு நிறுவன விஞ்ஞானியான வின்சென்ட் லைன், இதுபற்றி லிங்டுஇன் தளத்தில் பதிவிட்டுள்ளார். "அறிவியலால் எம்எச்-370 மர்மம் விலகியது' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியப் பெருங்கடலில் 6,000 மீட்டர் (சுமார் 20,000 அடி) ஆழமான பள்ளத்தில் (புரோக்கன் ரிட்ஜ்) விமானத்தை விழச்செய்திருப்பதாக கூறி உள்ளார். 

அவர் தனது ஆய்வு தொடர்பான அறிக்கையையும் விளக்கப்படத்தையும் வெளியிட்டுள்ளார். வின்சென்ட் லைன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விமானத்தில் இருந்து பெறப்பட்ட கடைசி இரண்டு தகவல் தொடர்புகள், கட்டுப்படுத்தப்பட்ட கிழக்கு நோக்கிய அவசர தரையிறக்கத்தை குறிப்பிடுகின்றன. இதை ஜர்னல் ஆப் நேவிகேஷன் (JN)ஏற்றுக்கொண்டது.

இந்திய பெருங்கடலின் 7-வது வளைவில் வந்தபோது எரிபொருள் தீர்ந்து, அதிவேகமாக தலைகீழாக வந்ததால் விமானம் விழுந்திருப்பதாக முதலில் கூறப்பட்ட கதையை, ஒரு தலைசிறந்த பைலட்டால் விபத்து நடந்திருப்பதாக, இந்த ஆய்வு மாற்றி உள்ளது. உண்மையில், விமானத்தின் வலது இறக்கை அலையில் மோதாமல் இருந்திருந்து, இன்மார்சாட்டின் வழக்கமான விசாரணை செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளின் கண்டுபிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் அந்த கதை வேலை செய்திருக்கும். 

இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, இது நேவிகேஷன் இதழிலும் அறிவிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வின்போது, விமானத்தின் இறக்கைகள், மடல் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதமும், இதற்கு முன்பு 2009ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி பறவையால் தாக்கப்பட்ட யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தை கேப்டன் சுல்லி, ஹட்சன் ஆற்றில் தரையிறக்கியபோது ஏற்பட்ட சேதமும் ஒரே மாதிரியாக இருந்தன.

இது, கடலில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் பாகங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் தலைமை கனடா விமான விபத்து ஆய்வாளர் லாரி வான்ஸ் கூறிய கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறது. கடலில் விழுந்தபோது விமானத்தில் எரிபொருள் இருந்தது, அதன் என்ஜின்கள் இயங்கிக்கொண்டிருந்தன என்றும், அது ஒரு தலைசிறந்த கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்கம் என்றும், எரிபொருள் தீர்ந்ததால் விபத்து நடக்கவில்லை என்றும் லாரி வான்ஸ் கூறியிருந்தார்.

விமானம் விழுந்திருக்கும் இடமானது, மிகவும் கரடுமுரடான மற்றும் ஆபத்தான கடல் சூழலுக்குள் உடைந்த ரிட்ஜின் கிழக்கு முனையில் மிக ஆழமான 6000 மீ துளையை கொண்டுள்ளது. குறுகிய செங்குத்தான பக்கங்கள், பெரிய முகடுகள் மற்றும் வேறு சில ஆழமான துளைகளாலும் சூழப்பட்ட நிலையில், அது நுண்ணிய வண்டல் மணலால் நிரம்பியுள்ளது. 

இதில் விமானம் விழுந்தால் கண்டுபிடிப்பது கடினம். எனவே, அந்த பகுதியை சரிபார்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். விமானம் தேடப்படுமா இல்லையா? என்பது அதிகாரிகள் மற்றும் தேடும் நிறுவனங்களைப் பொறுத்தது. 

ஆனால் அறிவியலைப் பொறுத்த வரையில், எம்எச்-370 விமானம் எங்கு உள்ளது என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் எம்எச்-370 விமானம் காணாமல் போனதில் உள்ள மர்மத்திற்கு விரிவான விடை காணப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4