முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவிய சர்வதேசம் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கு அரசுக்கு உதவிய சர்வதேசம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இடம் பெற்ற தேர்தல் பிரசாரத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தமிழ் மக்கள் பொதுச்சபை சார்பாக அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன், பசுமை தேசிய இயக்க தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.