பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் குற்றக்கும்பலைச் சேர்ந்த 3400 பேர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கடந்த 05 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 3,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 விசேட பொலிஸ் குழுக்கள் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு நேரடியாக ஆதரவு, திட்டமிடல் மற்றும் உதவி செய்ததற்காக 3,411 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (22.08) கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் 38 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான உத்தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே