எதிர்காலத்தில் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் - மஹிந்த வலியுறுத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து செயற்படும் கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.