MPOX தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் : அச்சத்தில் பாகிஸ்தான்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எம்பாக்ஸ் அல்லது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பாகிஸ்தான் அஞ்சுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அச்சம் காரணமாக பாகிஸ்தான் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானில் உள்ள எல்லை, சுகாதார சேவைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து நுழைவுப் புள்ளிகளிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் நாட்டிற்குள் நுழையும் போது அவர்கள் கடுமையாக பரிசோதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டை சேர்ந்த குரங்கு நோய் நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இதனை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



