மாபெரும் பொதுக்கூட்டத்தை ஆரம்பித்துள்ள அனுரகுமார திஸாநாயக்க!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17.08) மாலை 4 மணிக்கு தங்காலையில் ஆரம்பமாகவுள்ளது.
வெஹெர விகாரைகளின் அபிவிருத்திக்கான நிதியை அழித்தவர்கள் தேசிய மக்கள் படையின் கலாசார கொள்கையை விமர்சிப்பதாக அனுரகுமார திஸாநாயக்க இன்று சர்வ மத தலைவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வந்த போது குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று காலை வெள்ளவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகைக்க சங்க சபை அலுவலகத்திற்குச் சென்று மகா சங்கரத்தினரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றார்.
பின்னர் பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்திற்கு வந்து இந்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.