ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய கூட்டணி : நாளை வெளியாகும் அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணியின் செயலாளர் நாயகமாக அமைச்சர் ரமேஷ் பத்திரன நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயலாளர் நாயகமாக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (13.08) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, புதிய கூட்டணியை நாளை (14) அறிவிக்கவுள்ளதாககுறிப்பிட்டார்.