கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12.08) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு பின்னால் முச்சக்கரவண்டி ஒன்று வந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.