டக்ளஸ் தேவானந்தாவிற்காக வவுனியாவில் வாகனப் பேரணி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகின்றமையை கொண்டாடும் முகமாக வவுனியாவில் வாகனப் பேரணி ஒன்று இன்று இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன பேரணியானது பண்டரிகுளம் முனியப்பர் கோவில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை அடுத்து அங்கிருந்து ஆரம்பித்து நகர் வழியாக காத்தார் சின்னக்குளம் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து அங்கு கூட்டமும் இடம்பெற்று இருந்தது.
இதன் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் உட்பட கட்சியின் பிரமுகர்கள் இளைஞர் அணி பலரும் கலந்து கொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே