இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

#SriLanka #Fisherman #Sri Lankan Army #IndianArmy
Lanka4
11 months ago
இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த இந்திய மீனவரின் சடலம் ஒப்படைப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஜூலை 31ஆம் தேதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து இலங்கை ரோந்து படகு ஒன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது மோதியதில் அந்த விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்துள்ளனர்.

கடலில் குதித்ததில் மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் மூக்கையா மற்றும் முத்து முனியாண்டி ஆகிய இரண்டு மீனவர்களும் சிறு காயத்துடன் இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளனர் மேலும் ஒரு மீனவரான ராமச்சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்குப் பின் காங்கேஷன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது முருகேசன் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்ற முத்து முனியாண்டி மூக்கையா ஆகியோரை சரியாக சுமார் இரண்டு மணி அளவில் ஐ எம் பி எல் பாடரில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகளிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு இறந்த மீனவரின் உடல் கொண்டுவரப்பட்டது மேலும் அவருடன் மீன்பிடிக்க சென்று சிறு காயங்களுடன் தப்பித்த மூக்கையா தெரிவிக்கும் பொழுது.

ஜூலை 31ஆம் தேதி காலை 1.30 மணி அளவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம் மீன்பிடித்து விட்டு பகல் ஒரு மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை நேவி கப்பல் எங்கள் படகின் மீது திடீரென மோதியதில் எங்களது படகின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்த உடனே ஒரு நிமிடத்திற்குள் விசைப்படகு கடலுக்குள் தாழ்ந்ததாகவும் நாங்கள் நான்கு பேரும் தண்ணீரிலேயே சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மிதந்தோம் மலைச்சாமி மயக்கம் அடைந்தார் அவரை இலங்கை நேவி அதிகாரிகள் மீட்டு மருத்துவ உதவி செய்து மாற்று கப்பலில் அவரை உடனடியாக மருத்துவமனை அனுப்பி விட்டனர் ராமச்சந்திரனை தேடும் பணியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல் தற்போது வரை தேடி வருவதாகவும் எங்களை மாலை 5 மணி அளவில் காங்கேஷன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று மாற்று உடை உணவு கொடுத்து ஊர்க்காவல் துறை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் தெரிவித்தோம் மேலும் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்தனர் இந்திய எம்பஸி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே உடனடியாக ஊர்காவல்துறை நீதிபதி இறந்த மலைச்சாமியின் உடலை ஆய்வு செய்து உடற்கூறு ஆய்வுக்கு பின் உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார் அதன் பின் எங்களை மலைச்சாமி என் உடலுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் நடுக்கடலில் ஒப்படைத்தனர் தற்போது நாங்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் ராமச்சந்திரனின் உடலை ஐந்து கப்பல் கொண்டு சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை என ராமேஸ்வரம் வந்த மூக்கையா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!