அவிசாவளை வீதியில் விபத்து : பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
#SriLanka
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் மிரிஸ்குடு வளைவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியில் சென்று கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய அதிகாரி சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.