தாதாவ் கங் ஓயாவில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
தாதாவ் கங் ஓயாவில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கிண்டிகொட பிரதேசத்தில் உள்ள தாதாவ் கங் ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (28.07) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 05 அடி 10 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அவர் மஞ்சள் மற்றும் கருப்பு பட்டிக் சேலை மற்றும் பச்சை நிற டி-சர்ட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!