பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கிய கப்பல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
1.5 மில்லியன் லிட்டர் தொழிற்சாலை எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கியுள்ளது.
இதனால், சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை நிவாரணக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
காணாமல் போனவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.