சீரற்ற வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமலில் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை செயலில் இருப்பதால், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.
மேற்படி வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கடற்பகுதியில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மறு அறிவிப்பு வரும் வரை படகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்



