அலி சப்ரி ரஹீம் 1000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 1000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு புத்தளம் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், இன்று கல்பிட்டி பொலிஸாருக்கு வந்த போது, அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.