சீனாவில் இடிந்து விழுந்த பாலம் : 30 பேர் மாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வடமேற்கு சீனாவின் ஷான்சி மாகாணத்தில் நெடுஞ்சாலையை சுமந்து செல்லும் பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் பெய்த மழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மீட்புக் குழுவினர் தலையிட்டு பாலம் இடிந்து விழுந்ததில் 05 வாகனங்கள் ஆற்றில் விழுந்து கிடந்தன.
இந்த விபத்தில் 30 பேரை காணவில்லை, அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



