ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ரணில் எடுத்துள்ள விசேட நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பு மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் குழுவொன்றை நியமிக்க முன்வந்துள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க சம்பந்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் மேலும் முன்மொழியப்பட்டுள்ளது.



