இலங்கைக்கு நன்கொடையளித்த சீன அரசு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் இன்று (16.07) கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தது.
இந்த அரிசி கடற்றொழில் திணைக்களம் ஊடக 2,978கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் பளை, கண்டாவளை, பூநகரி, நாச்சிக்குடா ஆகிய நான்கு கடற்றொழில் அலுவலகங்கள் ஊடக இந்த அரிசி விநியோகம் செய்யப்படவுள்ளது.